×

அகில இந்திய துணை தொழிற்தேர்வு மார்ச் மாதம் நடத்த திட்டம்

சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வெளியிட்ட அறிக்கை: கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் 2017-2019ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணை தொழிற்தேர்வு மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, துணை தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை வருகிற 15ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தி, துணை தேர்வில் கலந்து கொள்ளலாம்.

The post அகில இந்திய துணை தொழிற்தேர்வு மார்ச் மாதம் நடத்த திட்டம் appeared first on Dinakaran.

Tags : All India ,CHENNAI ,
× RELATED சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை...